உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பஸ் - வேன் மோதி 30 பேர் படுகாயம்

பஸ் - வேன் மோதி 30 பேர் படுகாயம்

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே தனியார் பேருந்து மற்றும் தனியார் தொழிற்சாலை வேன் மோதிய விபத்தில், 30 பேர் காயமடைந்தனர். காஞ்சிபுரத்தில் இருந்து நேற்று காலை திருவள்ளூர் நோக்கி, தனியார் பேருந்து 40க்கும் மேற்பட்ட பயணியருடன் திருவள்ளூர் சென்றது. ஸ்ரீபெரும்புதுார் - திருவள்ளூர் நெடுஞ்சாலையில் போளிவாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, பேருந்து மீது எதிரே வந்த மஹிந்திரா வேன் மோதியது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநரான ஆர்.கே.பேட்டையைச் சேர்ந்த திலீப், 29, தொழிற்சாலை வேன் ஓட்டுநர் வாலாஜாபாத்தைச் சேர்ந்த தமிழரசன், 39, மற்றும் பேருந்து, வேனில் பயணம் செய்த 30 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை