ரவுடிக்கு வெட்டு அம்பத்துாரில் துணிகரம்
அம்பத்துார், மாடம்பாக்கம், சித்தாலட்சுமி நகரைச் சேர்ந்த நவீன், 24. இவர் முத்தமிழ் நகர் பகுதியில் சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர், தலையில் சரமாரியாக வெட்டி தப்பினர். அம்பத்துார் போலீசார், வாலிபரை ஆம்புலன்ஸ் வாயிலாக மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். கொலை வழக்கு தொடர்பாக, வில்லிவாக்கம் காவல் நிலையத்திற்கு வந்து திரும்பி செல்லும்போது, அவரை வெட்டிஉள்ளனர். இதுதொடர்பாக மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.