உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  பெரம்பூர், ஆவடியில் நாளை மின் குறைதீர் கூட்டம்

 பெரம்பூர், ஆவடியில் நாளை மின் குறைதீர் கூட்டம்

சென்னை: சென்னை எழும்பூர், ஆவடி, பெரம்பூர் ஆகிய இடங்களில் நாளை காலை 11:00 மணிக்கு, மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் நடக்கின்றன.  எழும்பூர்: செயற்பொறியாளர் அலுவலகம், எண். 53, ஈ.வி.கே.சம்பத் சாலை, 33/11 கிலோ வோல்ட் துணை மின் நிலைய வளாகம், வேப்பேரி.  ஆவடி: செயற்பொறியாளர் அலுவலகம்,230 கி.வோ., துணை மின் நிலைய வளாகம், எஸ்.எம்.நகர், முருகப்பா பாலிடெக்னிக் அருகில், ஆவடி.  பெரம்பூர்: செயற்பொறியாளர் அலுவலகம், 110 கி.வோ., செம்பியம் துணை மின் நிலைய வளாகம், எம்.இ.எஸ்.ரோடு, சிம்சன் எதிரில், சென்னை - 11. மேற்கண்ட இடங்களில் நடக்கும் குறைதீர் கூட்டத்தில் எழும்பூர், ஆவடி, பெரம்பூரில் வசிக்கும் மக்கள் பங்கேற்று மின் தடை, மீட்டர் பழுது, கூடுதல் மின் கட்டணம் வசூல் உள்ளிட்ட மின்சாரம் தொடர்பான குறைகளை மின் வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்து பயன் பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ