ஏ.டி.எம்., மையத்தில் தீ விபத்து
சிட்லப்பாக்கம், சிட்லப்பாக்கம், அண்ணா தெருவில், ஹெச்.டி.எப்.சி., - ஏ.டி.எம்., மையம் உள்ளது. இந்த மையத்தில் கண்காணிப்பு கேமரா இணைப்புகளை சரிசெய்யும் பணி, நேற்று நடந்தது. அப்போது, மின் கசிவால், திடீரென மின் வடங்கள் கரும்புகையுடன் எரிந்தன.சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி, ஏ.டி.எம்., மையம் முழுதும் கொழுந்துவிட்டு எரிந்தது. தாம்பரம் தீயணைப்பு துறையினர் விரைந்து, தீயை அணைத்தனர். அதற்குள் ஏ.டி.எம்., மிஷின் முழுதுமாக எரிந்தது. அதில், 8.50 லட்சம் ரூபாய் இருந்ததாக கூறப்படுகிறது. விபத்தில் பணம் எரிந்ததா, இல்லையா என்பது, ஏ.டி.எம்., பெட்டகத்தை உடைத்து பார்த்தால் மட்டுமே தெரியும் என, அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்து குறித்து, சிட்லப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.