ஏரி நீரில் மூழ்கி மெக்கானிக் பலி
பள்ளிக்கரணை,பள்ளிக்கரணை, சாய் கணேஷ் நகரைச் சேர்ந்தவர் கணேஷ்பாபு, 25; மெக்கானிக்.பள்ளிக்கரணை அணை ஏரியில், நண்பர் சாமுவேல், புகழரசன் ஆகியோருடன், நேற்று முன்தினம் மதியம் குளித்தார்.கணேஷ்பாபு, ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்றபோது மூழ்கினார். நேற்று காலை, கணேஷ்பாபுவின் உடல் ஏரியில் மிதந்தது. பள்ளிகரணை போலீசார் மீட்டு விசாரிக்கின்றனர்.