உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அணுகு சாலையில் பார்க்கிங் வணிக வளாகங்கள் அடாவடி

அணுகு சாலையில் பார்க்கிங் வணிக வளாகங்கள் அடாவடி

ஜல்லடையன்பேட்டை, தாம்பரம் - -வேளச்சேரி பிரதான சாலையில், மேடவாக்கம் அடுத்த ஜல்லடையன்பேட்டையில், தனியார் வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது.இங்கு, தினமும் ஆயிரக்கணக்கானோர் வருகை தந்து, பொருட்களை வாங்கி செல்கின்றனர்.இந்த வணிக வளாகத்தின் முன்பகுதியில், 15 அடி அகலம், 30 அடி நீளமுள்ள அணுகு சாலை உள்ளது.பொதுமக்கள், வாகன போக்குவரத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ள அந்த அணுகு சாலையை தங்களுக்கான வாகன நிறுத்தமாக, வணிக வளாகத்தினர் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:பொதுப் பயன்பாட்டிற்கான அணுகு சாலையை, தனியார் வணிக வளாகம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து, வாகன நிறுத்தமாக பயன்படுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள், அணுகு சாலையை பயன்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது. இது குறித்து, காவல் துறை, நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அனுப்பியும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.சம்பந்தப்பட்ட துறைகளின் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, பொதுமக்கள் பயன்படுத்தும் அணுகுசாலையை கொண்டு வரவேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி