சாலையோரம் துாங்கியவர் லாரியில் அடிபட்டு பலி
வடபழனி, வடபழனி ஆற்காடு சாலை, மசூதி அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு சென்ற ஈச்சர் லாரி, சாலையோரம் படுத்து துாங்கியவர் மீது ஏறி இறங்கியது. சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.இறந்தவர் சாலையோரம் தங்கி பிச்சை எடுத்து வந்தவர், 50 வயது இருக்கும் என, கூறப்படுகிறது. பெயர் விபரம் தெரியவில்லை. இதுகுறித்து, பண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிந்து, விபத்து ஏற்படுத்திய, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் நவீன் குமார், 31 என்பவரை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.