மேலும் செய்திகள்
அடையாளம் தெரியாத ஆண் சடலம்
01-Oct-2024
குன்றத்துார், தாம்பரம் அருகே வரதராஜபுரம் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில், 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம், அழுகிய நிலையில் மிதந்துள்ளது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள், சோமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து போலீசார் கூறுகையில்,'இறந்தவர் யார் என அடையாளம் தெரியவில்லை. மூன்று நாட்களுக்கு முன் இவர் கிணற்றில் விழுந்து இறந்திருக்கலாம். தவறி விழுந்து இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரித்து வருகிறோம்.' என்றனர்.
01-Oct-2024