இளைஞரின் ரீ ல்ஸால் சலசலப்பு
ஆவடி: ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் ரீல்ஸ் வெளியிட்ட இளைஞரால் சலசலப்பு ஏற்பட்டது.பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்தாண்டு ஜூலை 5ம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.நேற்று முன்தினம், அவரது நினைவு தினத்தை முன்னிட்டு, ஆவடி அடுத்த பொத்துார், ரோஜா நகரில் உள்ள அவரது நினைவிடத்தில், அஞ்சலி செலுத்த வந்த இளைஞர் ஒருவர், 'அண்ணனை கொன்றவர்களை கண்டுபிடித்து, அவன் குடலை உருவ வேண்டும்.'இதை நீங்கள் இல்லை, தலைமையே நினைத்தாலும் தடுக்க முடியாது' என, வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.