உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / டூ - வீலர், அரசு பஸ் மோதல் 5 மாத கர்ப்பிணி உயிரிழப்பு

டூ - வீலர், அரசு பஸ் மோதல் 5 மாத கர்ப்பிணி உயிரிழப்பு

மதுராந்தகம், திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தேசூர் பகுதியைச் சேர்ந்தவர் காமேஷ், 33. அண்ணா நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சந்தியா, 27. ஐந்து மாத கர்ப்பிணி. பொங்கல் பண்டிகை முடிந்து தன் மனைவியுடன், நேற்று 'ஹீரோ ஹோண்டா' இருசக்கர வாகனத்தில், வந்தவாசியில் இருந்து புறப்பட்டு சென்னை நோக்கி காமேஷ் வந்து கொண்டிருந்தார்.அப்போது, மாமண்டூர் அடுத்த வடபாதி அருகே, சென்னை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பண்ருட்டியில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பேருந்து, இருசக்கர வாகனத்தின் பின்னால் மோதியது.இதில், நிலைகுலைந்து கீழே விழுந்த சந்தியாவின் மீது, அரசு பேருந்தின் சக்கரம் ஏறியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காமேஷ் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். படாளம் போலீசார் விசாரிக்கின்றனர்.சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தில், அரசு பேருந்தின் கண்ணாடி உடைந்துள்ளது. இடம்: வடபாதி, மாமண்டூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை