உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தொழிலாளர் நலச்சட்டங்களை மீறியதாக 186 வழக்குகள் பதிவு

தொழிலாளர் நலச்சட்டங்களை மீறியதாக 186 வழக்குகள் பதிவு

கோவை: கோவை மாவட்டத்தில், தொழிலாளர் நலச்சட்டங்களை மீறியதாக, 186 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.கோவை தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், எடையளவு சட்டத்தின் கீழ் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். எடை குறைவு, முத்திரை, மறுமுத்திரையிடாத எடை அளவு, சோதனை எடைக்கற்கள் வைத்திருக்காதது உட்பட, 55 முரண்பாடுகள் கண்டறிந்தனர். அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட, கூடுதல் விலைக்கு விற்பனை செய்தல் தொடர்பாக 2 முரண்பாடுகள் கண்டறியப்பட்டு, வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. தொழிலாளர் நலச்சட்டங்களை மீறியதாக, 127 நிறுவனங்கள் மீது வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. ஜூலை மாதத்தில் மட்டும் மொத்தம், 186 நிறுவனங்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. மோட்டார் போக்குவரத்து தொழிலாளர் சட்டத்தின் கீழ், பதிவு சான்று பெறாத இரண்டு கல்வி நிறுவனங்கள் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. குறைந்தபட்ச கூலி வழங்காத ஒரு நிறுவனம் மீது தாக்கல் செய்த வழக் கில், மூன்று லட்சத்து, 66 ஆயிரத்து, 479 ரூபாய் நிலுவை தொகை பெறப்பட்டு வழங்கப்பட்டது.குழந்தை தொழிலாளர், வளர் இளம் பருவத் தொழிலாளர்கள் பணிபுரிகிறார்களா என தொழிலாளர் நலத்துறையினரால் ஆய்வு செய்யப்பட்டது. ஒரு குழந்தை, ஒரு வளர் இளம் பருவ தொழிலாளர் மீட்கப்பட்டு, குழந்தை நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவர்களை பணிக்கு அமர்த்திய இரு நிறுவனங்களுக்கு தலா, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக, தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ