| ADDED : ஜூலை 19, 2024 11:04 PM
கோவை;கோவை கொடிசியா வர்த்தக வளாகத்தில், பர்னிச்சர், பேஷன் பொருட்கள், பல வித இன்டீரியர் வீட்டு உபயோக பொருட்களுக்கான, நான்கு நாட்கள் கண்காட்சி நேற்று துவங்கியது. 22ம் தேதி நிறைவு பெறுகிறது.வெளிநாட்டு, உள்நாட்டு வகைகளில் தேக்கு, கண்ணாடி, அக்ரிலிக், பைபர், மாடுலர் , டைனிங், கார்டனிங், என அனைத்து வகை பர்னிச்சர் ஒரே இடத்தில், 15க்கும் மேற்பட்ட முன்னணி பிராண்டுகளில் நிறுவனங்கள் அரங்குகள் அமைத்துள்ளன. பர்னிச்சர் உட்பட அனைத்து பொருட்களையும் வாங்கும் வகையில், 120 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. வீட்டு தேவைகளுக்கு மட்டுமின்றி, அலுவலக பர்னிச்சர் ஆடி தள்ளுபடி விலையில் வாங்கலாம். பழைய பர்னிச்சரை கொடுத்து, மாற்றிக்கொள்ளவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.இதில், முன்பணம் இன்றி இ.எம்.ஐ., வசதியில் பர்னிச்சர் வாடிக்கையாளர்கள் வாங்கிச்செல்லலாம். காலை, 10:30 முதல் இரவு, 8:30 மணி வரை பார்வையாளர்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள்.