பணம் பறிக்க முயற்சி
சாய்பாபா காலனியை சேர்ந்தவர் தினேஷ்குமார்,34. இவர் ஜீவா நகர் அடுத்த தனியார் பள்ளி அருகேயுள்ள காலியிடத்தில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அங்கு வந்த நரசிம்மநாயக்கன்பாளையம், ஸ்ரீ கணேஷ் நகரை சேர்ந்த நிதிஷ்குமார்,24, மற்றும் ஆறுமுகம்,46, ஆகியோர் கத்தியை காட்டி, தினேஷ்குமாரிடம் பணம் பறிக்க முயன்றனர்.இருவர் மீதும் ஏற்கனவே பல வழக்குகள் உள்ள நிலையில், இதுகுறித்த புகாரின் பேரில் சாய்பாபாகாலனி போலீசார், நிதிஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆறுமுகம் உடல்நலக்குறைவு காரணமாக, கோவை அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கத்தியை காட்டி 'அபேஸ்'
புலியகுளம், மங்கம்மாள் லே-அவுட்டை சேர்ந்தவர் கலையரசன்,41; 'மெஸ்' உரிமையாளர். இவர் மெஸ்சில் இருந்தபோது அங்குவந்த புலியகுளம், அம்மன் நகரை சேர்ந்த பிஜூ(எ)விக்னேஷ்,19, மது அருந்துவதற்கு பணம் கேட்டு கலையரசனிடம் கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். பயந்துபோன அவர் தனது பாக்கெட்டில் இருந்த ரூ.1,500 ரொக்கத்தை கொடுத்துள்ளார். கலையரசன் அளித்த புகாரின் பேரில், ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிந்து விக்னேசை கைது செய்தனர். செம்பு கேபிள் திருட்டு
ராம் நகரை சேர்ந்தவர் சதீஸ்குமார்,48; வர்த்தகர். கடந்த, 27ம் தேதி இரவு, 8:00 மணிக்கு குடோனை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். கடந்த, 29ம் தேதி மீண்டும் குடோனை திறந்தபோது, 75 கிலோ செம்பு கேபிள் திருடுபோனது கண்டு அதிர்ச்சியடைந்தார். 'சிசிடிவி' காட்சிகளை பார்வையிட்டபோது, நபர் ஒருவர் கேட்டில் இருந்து குதித்து, குடோனுக்குள் நுழைந்து திருடி செல்வது தெரிந்தது. காட்டூர் போலீசில் சதீஸ்குமார் புகார் அளிக்க, விசாரணை நடந்து வருகிறது.