உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சொக்கலிங்கேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக விழா துவக்கம்

சொக்கலிங்கேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக விழா துவக்கம்

பெ.நா.பாளையம்;பெரியநாயக்கன்பாளையம் சொக்கலிங்கேஸ்வரர்கோவிலில், அஷ்டபந்தனமஹா கும்பாபிஷேக விழா கணபதி ஹோமத்துடன் துவங்கியது.இக்கோவிலில் ராஜகோபுரம், மூலவர், பரிவார மூர்த்திகள், கோபுரங்கள் ஆகியவை புனரமைக்கப்பட்டு, வரும் 12ம் தேதி வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இதையொட்டி, நேற்று முன்தினம் காலை, 7.00 மணிக்கு மகாலட்சுமி ஹோமம், மாலை, 6.00 மணிக்கு சாந்தி ஹோமம், மூர்த்தி ஹோமம் நடந்தன.நேற்று மாலை, 5.00 மணிக்கு முதல் கால யாக சாலை பூஜை நடந்தது. இன்று காலை, 9.00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜைகளும், மாலை, 6.00 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜைகளும், வியாழக்கிழமை காலை, 9.00 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜைகளும், மாலை, 5.00 மணிக்கு ஐந்தாம் கால யாகசாலை பூஜைகளும் நடக்க உள்ளன.வரும் வெள்ளிக்கிழமை,12ம் தேதி அதிகாலை, 3.00 மணிக்கு ஆறாம் கால யாகசால பூஜைகளும், தொடர்ந்து அதிகாலை, 5.30 மணி முதல், 6:30 மணிக்குள் கும்பாபிஷேகமும் நடக்க உள்ளது. விழாவை ஒட்டி அன்னதானம், மாலை, 5.00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், இரவு, 7.00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் திருவீதி உலாவும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !