உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தொண்டாமுத்துார் அரசு கலை அறிவியல் கல்லூரியில் வரும் 10ம் தேதி கலந்தாய்வு

தொண்டாமுத்துார் அரசு கலை அறிவியல் கல்லூரியில் வரும் 10ம் தேதி கலந்தாய்வு

தொண்டாமுத்தூர்;தொண்டாமுத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில், வரும், 10ம் தேதி, இந்தாண்டு மாணவர் சேர்க்கைக்கான பொதுக்கலந்தாய்வு துவங்குகிறது.தொண்டாமுத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில், பி.பி.ஏ., பி.காம்., (சி.ஏ.,), பி.காம்., (பி.ஏ.,), பி.ஏ., (பொருளாதாரம்), பி.ஏ., (ஆங்கிலம்), பி.எஸ்.சி., கணிதம் ஆகிய ஆறு பாடப்பிரிவுகள் உள்ளன. இந்தாண்டு, மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், ஆன்லைன் மூலம் பெறப்பட்டன. அதன்பின், கடந்த மே 27ம் தேதி, தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. மொத்தம், 6,032 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.இதனைத்தொடர்ந்து, கடந்த, மே 30ம் தேதி, சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடந்தது. பொது பிரிவினருக்கான கலந்தாய்வு, வரும் 10ம் தேதி, பி.ஏ., (ஆங்கிலம்) மற்றும் பி.எஸ்.சி., கணிதம் ஆகிய பாடப்பிரிவுக்கு 11ம் தேதி, பி.பி.ஏ., பி.காம்., (சி.ஏ.,), பி.காம்., (பி.ஏ.,), பி.ஏ., (பொருளாதாரம்) ஆகிய பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடக்க உள்ளது. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள், ஜூலை 3ம் தேதி துவங்க உள்ளதாக, கல்லூரி முதல்வர் சக்தி ஸ்ரீ தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ