| ADDED : ஆக 10, 2024 03:13 AM
பொள்ளாச்சி:பூசாரிப்பட்டி பொள்ளாச்சி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், வணிகவியல் துறையின் நுகர்வோர் அமைப்பு சார்பில், நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வு என்ற தலைப்பில் மாணவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி நடந்தது.கல்லுாரி தாளாளர் மகேந்திரன் தலைமை வகித்தார். கல்லுாரியின் கல்வி சார் தாளாளர் சிவானி கிருத்திகா, கல்லுாரி முதல்வர் கண்ணன் பேசினர். வணிகவியல் துறை உதவி பேராசிரியர் மகேஷ் பிரபா வரவேற்றார். கோவை குடிமக்கள் குரல் அமைப்பின் தலைவர்களான ஜெயராமன், சுப்ரமணியம் ஆகியோர், பேசினர்.