உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு பள்ளி குழந்தைகளுக்கு இலவச கல்வி உபகரணங்கள்

அரசு பள்ளி குழந்தைகளுக்கு இலவச கல்வி உபகரணங்கள்

பெ.நா.பாளையம் : தடாகம் அருகே உள்ள நஞ்சுண்டாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அனைத்து அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு இலவச நோட்டு, புத்தகங்கள் மற்றும் புத்தகப் பைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நஞ்சுண்டாபுரம் ஊராட்சி முன்னாள் தலைவர் சுந்தரராஜன், கடந்த, 18 ஆண்டுகளாக நஞ்சுண்டாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பாப்பநாயக்கன்பாளையம், இராமநாதபுரம், வரப்பாளையம், நஞ்சுண்டாபுரம், உஜ்ஜையனூர், சோமையனூர் ஆகிய கிராமங்களில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும், இலவசமாக கல்வி உபகரணங்களை வழங்கி வருகிறார்.நடப்பாண்டு இலவச கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி பாப்பநாயக்கன்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு, நஞ்சுண்டாபுரம் ஊராட்சி முன்னாள் தலைவர் சுந்தரராஜ், வி.கே.வி., குரூப் ஆப் கம்பெனிஸ் நிர்வாக இயக்குனர் வினீஷ், துணைத் தலைவர் திருநாவுக்கரசு, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி