உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பவானி அணையில் மண் எடுக்கும் நேரத்தை நீட்டிக்க வலியுறுத்தல் 

பவானி அணையில் மண் எடுக்கும் நேரத்தை நீட்டிக்க வலியுறுத்தல் 

கோவை:பவானி அணையிலிருந்து, விவசாயிகள் வண்டல் மண் எடுக்கும் காலநேரத்தை நீட்டிப்பதோடு, வழித்தடங்களில் சில மாற்றங்களை செய்து, விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்று, பவானி ஆற்றுநீர் பாசன விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.பவானி ஆற்றுநீர் பாசன விவசாயிகள் சங்க தலைவர் துரைசாமி தலைமையில், விவசாயிகள் சிலர் கலெக்டரிடம் அளித்த மனு:பவானி அணை நீர் பிடிப்பு பகுதிகளில், வண்டல் மண் எடுக்க காலை 8:00 முதல் மாலை 5:00 மணி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த இடத்துக்கு, வனத்துறை வழியாக செல்ல வேண்டி இருப்பதால், குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே அனுமதி அளிக்கின்றனர். அதன்படி, காலை 9:00 முதல் மாலை 3:00 மணி வரை மட்டுமே மண் எடுப்பதற்கு வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.இந்த நேர கட்டுப்பாடு காரணமாக, விவசாயிகளுக்கு லாரி வாடகை மற்றும் மண் எடுக்கும் இயந்திரங்களுக்கு அதிக வாடகையாகிறது. விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.இந்நடைமுறையை மாற்றி அமைப்பதோடு, விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் திட்டங்கள் அமைய வேண்டும். இவ்வாறு, மனுவில் விவசாயிகள் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி