உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தபால் துறை குறைதீர் கூட்டம் 25ல் பங்கேற்க அழைப்பு

தபால் துறை குறைதீர் கூட்டம் 25ல் பங்கேற்க அழைப்பு

கோவை;கோவை கோட்ட அளவிலான தபால் குறைதீர் கூட்டம் வரும், 25ம் தேதி, குட்ஷெட் தெரு தலைமை தபால் நிலைய அலுவலக, இரண்டாவது மாடியில் நடைபெறவுள்ளது.கோவை கோட்டத்திற்கு உட்பட்ட வாடிக்கையாளர்கள், புகார்களை, 'கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், கோவை கோட்டம் குட் ஷெட் தெரு, கோவை-641001, என்ற முகவரிக்கு, ஜூன் 21 அல்லது அதற்கு முன் கிடைக்குமாறு அனுப்பிவைக்க வேண்டும். பதிவு தபால், விரைவு தபால், பணவிடை தொடர்பான புகார்களில் தபால் பதிவு செய்யப்பட்ட நாள், நேரம், அனுப்புநர், பெறுநர், முழு முகவரி, தபால் பதிவு எண், ஆகியவை குறிப்பிட்டு இருக்கவேண்டும். அஞ்சல் சேமிப்பு கணக்கு, காப்பீடு தொடர்பான புகார்களில், அது சார்ந்த முழுமையான தகவல்களுடன் அனுப்பிவைக்கப்படும். தபாலின், மேலுறையில் 'தபால் குறைதீர் கூட்ட புகார்' என்று எழுதப்பட்டு இருக்கவேண்டும். தபால்துறை தீர்ப்பு கூட்டத்தில், பங்கேற்க விரும்பும் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட தேதியில் உரிய நேரத்தில் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ