உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பேச்சியம்மன் கோவிலில் வரும் 4ல் கும்பாபிஷேகம்

பேச்சியம்மன் கோவிலில் வரும் 4ல் கும்பாபிஷேகம்

அன்னூர்;தாசபாளையம், பேச்சியம்மன் கோவிலில் வரும் 4ம் தேதி, கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.அன்னூர் அருகே தாசபாளையத்தில், பழமையான பேச்சியம்மன் கோவில் வளாகத்தில் புதிதாக முருகன் சிலை நிறுவியும், கோபுரம் அமைத்தும் திருப்பணிகள் செய்யப்பட்டன.கும்பாபிஷேக விழா வரும் 3ம் தேதி மாலை 5:00 மணிக்கு, விநாயகர் வழிபாடுடன் துவங்குகிறது, இரவு கோபுர கலசம் நிறுவுதல் மற்றும் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 4ம் தேதி காலை 10:30 மணிக்கு, விநாயகர், முருகன், கன்னிமார், பேச்சியம்மன் மற்றும் கோபுர கலசங்களுக்கு, புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. இதையடுத்து, மகா அபிஷேகம், கோ பூஜை, தீபாராதனை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை, ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை