உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வரும் ஐந்து நாட்களுக்கு லேசான மழை வரலாம்

வரும் ஐந்து நாட்களுக்கு லேசான மழை வரலாம்

கோவை;கோவையில் அடுத்த ஐந்து நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். லேசான மழை எதிர்பார்க்கப்படுவதாக, தமிழ்நாடு வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது. அதன்படி, இன்றும், நாளையும் ஒரு மி.மீ., 31ம் தேதி 7 மி.மீ., ஜூன் 1ல் 3 மி.மீ., ஜூன் 2ல் 5 மி.மீ., மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.குறைந்தபட்சம் இரவு நேர வெப்பநிலை, 21-23 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், அதிகபட்சம் பகல் நேர வெப்பநிலை, 31-33 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் நிலவும் என தெரிகிறது. காலை நேர காற்றின் ஈரப்பதம் 70 சதவீதமாகவும், மாலை நேர காற்றின் ஈரப்பதம் 30-40 சதவீதமாகவும் இருக்கும்.சராசரியாக, காற்றின் வேகம் மணிக்கு, 18-20 கி.மீ., வேகத்தில் தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும்.நிலவும் வானிலையை பயன்படுத்தி ஒத்திவைக்கப்பட்ட நீர்பாசனம், விதைப்பு, உரமிடல், மற்றும் மருந்து தெளிப்பினை தொடர அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !