உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மகா சக்தி மாரியம்மன் கோவில் பூச்சாட்டு

மகா சக்தி மாரியம்மன் கோவில் பூச்சாட்டு

மேட்டுப்பாளையம், : மேட்டுப்பாளையம் பங்களா மேட்டில் உள்ள, மகா சக்தி மாரியம்மன் கோவிலில், 14ம் ஆண்டு திருவிழா, பூச்சாட்டுடன் துவங்கியது. நேற்று முன்தினம் அதிகாலை, 5:00 மணிக்கு மஹா கணபதி ஹோமம் செய்யப்பட்டது. இரவு, 8:00 மணிக்கு அம்மனுக்கு பூச்சாட்டு நடந்தது. 23ம் தேதி அக்னி கம்பம் நடுதலும், 26ல் திருவிளக்கு பூஜையும், 28ல் ராஜபுரத்தில் இருந்து கரகம், பூச்சட்டி எடுத்து வருதல், 30ல் அம்மன் அழைப்பும், மே 1ம் தேதி சக்தி விநாயகர் கோவிலில் இருந்து, பால்குடம் எடுத்தலும், மாவிளக்கு பூஜை ஆகியவை நடைபெற உள்ளது. 2ம் தேதி மஞ்சள் நீராட்டும், 3ம் தேதி மறுபூஜையும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டியினர் மற்றும் ஊர் பொது மக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை