உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மோடி 3வது முறை பதவியேற்பு ;காமாட்சிபுரி ஆதினம் பங்கேற்பு

மோடி 3வது முறை பதவியேற்பு ;காமாட்சிபுரி ஆதினம் பங்கேற்பு

கோவை;பிரதமராக மோடி மூன்றாவது முறை பதவியேற்ற நிகழ்ச்சியில், காமாட்சிபுரி ஆதினம் பங்கேற்று சிறப்பித்துள்ளார்.பதவியேற்பு நிகழ்ச்சியில், நாடு முழுவதும் இருந்து முன்னாள் அமைச்சர்கள், திரைத்துறை பிரபலங்கள், சாதுக்கள் என, ஏராளமானோர் பங்கேற்றனர். 2014 மற்றும், 2019ம் ஆண்டுகளில் மோடி பிரதமராக பதவியேற்ற இரு நிகழ்ச்சிகளிலும், கோவையில் இருந்து காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் அழைக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டார்.சிவலிங்கேஸ்வர சுவாமிகள் முக்தி அடைந்ததை அடுத்து, பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் ஆதினமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.இதையடுத்து, பிரதமராக மோடி பதவியேற்ற நிகழ்ச்சியில், பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை