உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தேசிய கிக்பாக்ஸிங் போட்டி; கோவை மாணவருக்கு தங்கம் 

தேசிய கிக்பாக்ஸிங் போட்டி; கோவை மாணவருக்கு தங்கம் 

கோவை : தேசிய அளவிலான கிக்பாக்ஸிங் போட்டியில், கோவையை சேர்ந்த மாணவர் தங்கம் வென்று, சர்வதேச அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றார். கிக்பாக்ஸிங் பெடரேஷன் ஆப் இந்தியா, மகாராஷ்டிரா கிக்பாக்ஸிங் பெடரேஷன் சார்பில், தேசிய கிக்பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டி, புனேவில் உள்ள ஸ்ரீ சிவ் சத்ரபதி சிவாஜி விளையாட்டு அரங்கில் நடந்தது. குழந்தைகள் மற்றும் கேடட் பிரிவுகளில் நடந்த இப்போட்டியில், அகில இந்திய அளவில் இருந்து 1200க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்றனர். தமிழக அணி சார்பில் பங்கேற்ற, 108 மாணவர்களில் கோவையை சேர்ந்த மூவர் இடம் பிடித்திருந்தனர். இதில், கோவை ஆண்ட்லி கிக் பாக்ஸிங் அகாடமியில் பயிற்சி பெற்று வரும், யுவபாரதி பள்ளி மாணவர் மன்சர், தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். இதன்மூலம், சர்வதேச அளவிலான போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ளார். வெற்றி பெற்ற மாணவரை, பயிற்சியாளர் ஆண்ட்லி, கோவை மாவட்ட கிக்பாக்ஸிங் சங்க தலைவர் பிராங்கிளின், செயலாளர் பிரேம்குமார் ஆகியோர் வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ