உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சுண்டைக்காய் வத்தக்குழம்பு

சுண்டைக்காய் வத்தக்குழம்பு

செய்முறை:புளியை சிறிது சூடான தண்ணீரில் ஊற வைக்கவும். வெங்காயத்தையும் பூண்டையும் உறித்து சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி வைக்கவும்.சுண்டைக் காய்களின் காம்பை நீக்கி கழுவிய பின்னர் இரு துண்டுகளாக வெட்டி தண்ணீரில் போட்டு வைக்கவும்.அடுப்பில் எண்ணெய் சட்டியை வைத்து, இரண்டு டீஸ்பூன் எண்ணெய் விட்டு சூடாக்கவும். சூடானதும் கடுகு,கடலைப் பருப்பு, நிலக்கடலை போட்டு வறுக்கவும். பொன்னிறமானதும் வெந்தயம் மற்றும் பெருங்காயம் சேர்த்து வறுத்த பின் கருவேப்பிலை, வெங்காயம், பூண்டு போட்டு மணம் வரும் வரை வதக்கவும். பிறகு தக்காளியை, ஒரு நிமிடம் வதக்கவும். அடுத்து மஞ்சத் துாள் மற்றும் வெட்டி வைத்துள்ள சுண்டைக்காய் சேர்த்து, ஓரிரு நிமிடங்கள் வதக்கவும். பின்னர் கொடுக்கப்பட்டுள்ள துாள்களை சேர்த்து சில வினாடிகள் பிரட்டி விட்டு முக்கால் கப் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து காய் வேகும் வரை கொதிக்க விடவும்.கடைசியாக புளியை கரைத்து வடிகட்டி சேர்க்கவும். எண்ணெய் மேலே மிதக்க ஆரம்பிக்கும் வரை கொதிக்க விடவும். கடைசியாக உப்பு சேர்த்து சரி பார்க்கவும்.நான்கைந்து கருவேப்பிலையை கிள்ளி போட்டு அடுப்பை அணைக்கவும். பரிமாறும் பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். சாதத்தில் சுண்டைக்காய் வத்தக் குழம்பை விட்டு நல்லெண்ணெய் ஒரு தேக்கரண்டி ஊற்றி, பிசைந்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ