உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வேகமாக நிரம்புகிறது சிறுவாணி மழையால் நீர்மட்டம் அதிகரிப்பு

வேகமாக நிரம்புகிறது சிறுவாணி மழையால் நீர்மட்டம் அதிகரிப்பு

கோவை;பருவமழையின் தயவால், சிறுவாணி அணையின் நீர்மட்டம், 30 அடியை எட்டியுள்ளது. வரும் நாட்களில் மழை இருக்கும் என்பதால், நீர்மட்டம் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.கோவையின் முக்கிய நீராதாரங்களில் ஒன்றான சிறுவாணி அணை, கேரள மாநிலம் பாலக்காட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. சிறுவாணி அணையின் மொத்த நீர்த்தேக்க உயரம், 50 அடி. மழை பொய்த்ததால் இந்தாண்டு துவக்கத்தில், 26 அடியாக நீர் மட்டம் இருந்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தற்போது மழை பெய்து வருவதால், அணையின் நீர் மட்டம் படிப்படியாக அதிகரிக்க துவங்கியுள்ளது. கடந்த, 8ம் தேதி அடிவாரத்தில், 12 மி.மீ., மற்றும் அணைப்பகுதியில், 55 மி.மீ., மழை பதிவாக நீர் மட்டமானது, 28 அடியாக உயர்ந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அடிவாரத்தில், 17 மி.மீ., மழையும், அணைப்பகுதியில், 73 மி.மீ., மழையும் பதிவாகியிருந்தது. இதையடுத்து அணையின் நீர்மட்டம், 30 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து, 5.88 கோடி லிட்டர் நீர், குடிநீருக்காக எடுக்கப்பட்டு வருகிறது.மேற்கு தொடர்ச்சி மலையில், தொடர்ந்து மழை பெய்து வருவதால் வரும் நாட்களில் அணையின் நீர்மட்டம் மேலும், உயர வாய்ப்புள்ளது.கோவை மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, பதிவான மழை அளவு:பீளமேடு விமான நிலையம், 5.9 மி.மீ., வேளாண் பல்கலை - 5.40, பெரிய நாயக்கன்பாளையம், 1.60, பில்லுார் அணை , 6, கோவை தெற்கு தாலுகா, 3, தொண்டாமுத்துார், 20, மதுக்கரை தாலுகா, 8, போத்தனுார், 5 மி.மீ., பொள்ளாச்சி, 10, மாக்கினாம்பட்டி, 5, கிணத்துக்கடவு, 6, ஆழியார், 5, சின்கோனா, 31, சின்னக்கல்லார், 66, வால்பாறை பி.ஏ.பி., 41, வால்பாறை தாலுகா, 38, சோலையாறு, 36 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை