உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பொது ஒதுக்கீட்டு இடத்தில் அறிவிப்பு பலகை  அகற்றம்

பொது ஒதுக்கீட்டு இடத்தில் அறிவிப்பு பலகை  அகற்றம்

கோவை : ராமநாதபுரம் அருகே கொங்கு நகரில், 14 சென்ட் பொது ஒதுக்கீட்டு இடத்தில் வைக்கப்பட்ட மாநகராட்சி அறிவிப்பு பலகையை, மர்ம நபர்கள் அகற்றியுள்ளனர்.மாநகராட்சி மத்திய மண்டலம், 62வது வார்டு ராமநாதபுரம் அருகே கொங்கு நகரில், 1972ம் ஆண்டு கோவை நகராட்சியாக இருந்தபோது, கூட்டுறவு வீடு கட்டும் சங்கம் ஒன்றுக்கு, 8.49 ஏக்கர் இடத்தில், 84 மனைகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.பொது பயன்பாட்டிற்கென, 70 சென்ட் மற்றும், 14 சென்ட் இடம் என இரண்டு இடங்களில் ஒதுக்கப்பட்டிருந்தது. நாளடைவில் அவை தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த நிலையில் கடந்த, 22ம் தேதி மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர், ஆக்கிரமிப்பை மீட்கும் நடவடிக்கையை துவங்கினர்.இதில், 14 சென்ட் பொது ஒதுக்கீட்டு இடம் முழுமையாக மீட்கப்பட்டு, அந்த இடத்தில் மாநகராட்சி அறிவிப்பு பலகை நிறுவப்பட்டது. இந்நிலையில், இந்த 14 சென்ட் இடத்தில் இருந்த அறிவிப்பு பலகையை மர்ம நபர்கள் அகற்றியுள்ளனர்.இடத்தை ஆய்வு செய்த மாநகராட்சி அதிகாரிகள், புலியகுளம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்க உள்ளனர். இரண்டு பொது ஒதுக்கீட்டு இடங்களிலும், 'சிசிடிவி' கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும், முடிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை