உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தபால் அலுவலகங்களில் தேசியக்கொடி விற்பனை 

தபால் அலுவலகங்களில் தேசியக்கொடி விற்பனை 

பொள்ளாச்சி:நாட்டின் 78ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, 'இல்லந்தோறும் மூவர்ணக் கொடி 2024' என்ற திட்டத்தின் கீழ் தபால் அலுவலகங்களில் தேசிய கொடி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.பொள்ளாச்சி தபால் கோட்டக் கண்காணிப்பாளர் சாந்தினிபேகம் அறிக்கை: ஆக., 15ல், இந்திய நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து இல்லங்கள், அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தேசியக்கொடி ஏற்றப்பட வேண்டும் என்ற பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.அதன்படி, அனைத்து தபால் அலுவலகங்களிலும் தேசியக் கொடி விற்பனை நடந்து வருகிறது. ஒரு தேசியக் கொடி, 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மக்கள் தங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள தபால் அலுவலகங்களுக்குச்சென்று, தேசிய கொடி வாங்கிக்கொள்ளலாம்.ஆன்லைன் வாயிலாக வாங்க விரும்புவோர், http://www.epostoffice.gov.inஎன்ற இணையத்தளத்தில் பதிவு செய்து, தபால்காரர் வாயிலாக வீட்டிலேயே பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை