உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சுற்றுச்சூழலை பாதுகாக்க குப்பை கிடங்கில் மரக்கன்று

சுற்றுச்சூழலை பாதுகாக்க குப்பை கிடங்கில் மரக்கன்று

கோவை : வெள்ளலுார் குப்பை கிடங்கில், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடந்தது.கோவை மாநகராட்சியின், 100 வார்டுகளிலும் மக்கும் குப்பை, மட்காதது, 'இ-வேஸ்ட்' என, தினமும், 1,200 டன் வரை குப்பை சேகரமாகிறது.இக்குப்பையானது, வெள்ளலுார் குப்பை கிடங்கில் பல ஆண்டுகளாக குவிக்கப்பட்டதால், அப்பகுதி மக்கள் சுகாதார சீர்கேடு பிரச்னைக்கு ஆளாகியுள்ளனர். இக்கிடங்குக்கு செல்லும் குப்பை அளவை குறைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல், குப்பை கிடங்கு வளாகம், வழித்தடம் உள்ளிட்ட இடங்களை பசுமையாக மாற்ற, மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு வருகின்றன.மாநகராட்சி நிர்வாகம் சார்பில், பெருமளவு மரக்கன்றுகள் நடும் திட்டத்தில், 2,000 மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, மரக்கன்று நடும் நிகழ்வு துவக்கி வைக்கப்பட்டது. குப்பைக்கிடங்கில், 9.4 கி.மீ., சுற்றளவுக்கு, வேம்பு, பூவரசன், புங்கன், நாவல் உள்ளிட்ட, 14 வகையான மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளன. முன்னதாக மாநகராட்சி மேயர் கல்பனா, கமிஷனர் சிவகுருபிரபாகரன் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர். கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி