உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புகை கக்காத இ-ஆட்டோ; புழக்கத்துக்கு வந்தாச்சு!

புகை கக்காத இ-ஆட்டோ; புழக்கத்துக்கு வந்தாச்சு!

கோவை;மின்சாரத்தில் இயங்கும் வகையிலான, 25 'இ-ஆட்டோ'க்கள், கோவையில் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தன.புகை இல்லை. கையிலிருந்து காசு போட்டு பெட்ரோல் நிரப்ப வேண்டியதில்லை. வீட்டில், 5 மணி நேரம் சார்ஜ் போட்டால் 150 கி.மீ.,வரை, 60 கி.மீ., வேகத்தில் பயணிக்கலாம். சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தாத இ- ஆட்டோ கோவையில் புழக்கத்துக்கு வந்துள்ளது. இதற்கு ஆட்டோ டிரைவர்கள் இடையே நல்ல வரவேற்பு உள்ளது.'இ-ஆட்டோ' டிரைவர் வெங்கடேஷ் கூறியதாவது:நாளொன்றுக்கு 300 முதல் 500 ரூபாய்க்கு பெட்ரோல் அடித்தால், 100 முதல் 150 கி.மீ., வரைசாதாரண ஆட்டோக்களை இயக்கலாம். ஆனால் தற்போது எந்த செலவுமின்றி, 150 கி.மீ., இயக்கலாம். ஆனால் ஆட்டோவுக்கான முதலீடு மட்டும் ரூ.4 லட்சம். வங்கியில் கடன் பெற்று வாங்கியிருக்கிறேன். ஆட்டோ ஓட்டி தவணை செலுத்தி சொந்தமாக்கிக்கொள்ளலாம். இ-வாகனங்கள் வரவேற்புக்குரியது; சூழல் பாதிப்புகள் ஏற்படாது.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

சுந்தரம் விஸ்வநாதன்
ஆக 09, 2024 11:01

டிரைவர் வெங்கடேஷ் அவர்களே, தற்போது எந்த செலவுமின்றி, 150 கி.மீ., இயக்கலாம் என்று சொல்லிவிட்டீர்கள். இது போதும் எங்களுக்கு. சொல்லாததையும் செய்யும் மாடல் அரசு ஜனவரியில் மின் கட்டணத்தை ஏற்றிவிடும். நீங்கள் மீண்டும் பழைய டீசல் இன்ஜின் ஆட்டோவுக்கு விரைவில் திரும்பி விடுவீர்கள்.


சுந்தரம் விஸ்வநாதன்
ஆக 09, 2024 10:59

சுமார் பத்தாண்டுகளுக்கும் முன்பாகவே பீகார் பாட்னாவில் ரயில் நிலையத்தில் இருந்து நகரின் பல இடங்களுக்கு இ ஆட்டோ வில் பகிர்ந்து பயணித்தவன் நான். இன்றும் அங்கு அந்த இ ஆட்டோ இருக்கிறது. பகிர்வுக் கட்டணம் ஐந்து ரூபாய்தான். இப்போதுதான் நம் கோவைக்கு வருகிறது என்பதில் சற்று அவமானமாகத்தான் இருக்கிறது


chennai sivakumar
ஆக 09, 2024 08:34

சுமார் 10 வருடங்களுக்கு முன்னரே e cycle rickshaw payan பாட்டுக்கு வந்து விட்டது. கட்டணம் மிக குறைவு. இப்போதுதான் இங்கு எட்டி பார்க்கிறது. காரணம் ஊரில் ஓடும் ஆட்டோ யாருக்கு சொந்தம் என்று தெரியும். E rickshaw வந்து விட்டால் ஆட்டோக்கள் ஓரம் கட்ட வேண்டும். ஆட்டோ தயாரிப்பாளர்கள் தலையில் துண்டு. இனிமேல் என்ன நடக்கிறது என்று பார்ப்போம். ஆட்டோ கட்டணங்கள் குறைக்க படுமா என்பது கேள்விக்குறியே