உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தி தோல் சரும கிளினிக்கில் நவீன பேஷியல் கருவி ரெடி

தி தோல் சரும கிளினிக்கில் நவீன பேஷியல் கருவி ரெடி

கோவை;சாய்பாபா காலனியில் உள்ள தி தோல் சரும கிளினிக்கில் கொரியன் ஆக்ஸிஜன் கிளாஸ் பேஷியலை வழங்கும், அதிநவீன கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.ஏ.ஜி.எஸ்., ஹெல்த்கேர் மைய இயக்குனர் ஆதித்யன் குகன், தி தோல் சரும கிளினிக் இயக்குனர் ஜனனி முன்னிலையில் இக்கருவியை துவக்கி வைத்தார்.பின்னர், டாக்டர் ஜனனி கூறுகையில், ''சருமத்தின் செல்களில் ஆக்ஸிஜன் அளவு குறையும் போது, அவை சோர்வடைந்து வயதான தோற்றத்தை ஏற்படுத்தும். தற்போதைய வாழ்க்கை முறை, அதிகரித்து வரும் காற்று மாசு உள்ளிட்ட காரணங்களால் சருமம் பாதிப்புக்கு உள்ளாகிறது. ''இந்த 'O2 டூ டெர்ம் எல்.இ.டி.,+' என்ற கருவியின் வாயிலாக ஒருவரின் முகத்தில் இளமையான சருமத்தை வழங்க முடியும். ஒரு மணி நேரத்தில் இந்த சிகிச்சையை வழங்கமுடியும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை