உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / செண்பகம் பள்ளியில் மாணவர் தேர்தல்

செண்பகம் பள்ளியில் மாணவர் தேர்தல்

பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே, ஜமீன்ஊத்துக்குளி செண்பகம் மெட்ரிக் பள்ளியில், மாணவர் தேர்தல் நடத்தப்பட்டது. மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்களும் அனைவரும் ஆர்வமுடன் ஓட்டுப் பதிவு செய்தனர்.அதன் வாயிலாக, மாலையில் ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட்டது. அதன்படி, மாணவர் தலைவராக பிளஸ் 1 மாணவர் பிரவீன்குமார், துணைத்தலைவராக 9ம் வகுப்பு அஸ்வின், விளையாட்டுத்துறை தலைவராக 9ம் வகுப்பு மாணவி லக் ஷிதா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.இவர்களை, பள்ளித்தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் உட்பட அனைவரும் வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ