உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை மாநகராட்சிக்கு தமிழக அரசின் விருது

கோவை மாநகராட்சிக்கு தமிழக அரசின் விருது

கோவை : தமிழகத்தில் சிறந்த மாநகராட்சிக்கான விருது, கோவை மாநகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.சுதந்திர தினத்தை முன்னிட்டு, மாநிலத்தில் சிறந்த மாநகராட்சி, நகராட்சி அமைப்புகளுக்கு விருதுகள் வழங்கப்படும்.இதில், சிறந்த மாநகராட்சியாக கோவை மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டது. இரண்டாவது இடத்தை துாத்துக்குடி மாநகராட்சி பிடித்துள்ளது.முதலிடத்தை பிடித்த கோவை மாநகராட்சி நிர்வாகத்துக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். சென்னையில் நடக்கும் சுதந்திர தினவிழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இவ்விருதை வழங்க உள்ளார்.கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன் கூறுகையில்,''குப்பை மேலாண்மை, வரிவசூல், குடிநீர் வினியோகம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களும், விருதுக்காக கருத்தில் கொள்ளப்பட்டன. இதில் சிறப்பாக பணியாற்றியதன் அடிப்படையில், இவ்விருது வழங்கப்படுகிறது. தொடர்ந்து சிறப்பாக பணிபுரிய திட்டமிட்டுள்ளோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ravi
ஆக 16, 2024 23:29

Dangerous roads, every street so many poth holes, most pathetic roads, street lights, Unwanted u turn concept so many accidents due to that, no proper signals, many trees are cut and many naturals places are changed to construction everywhere in Coimbatore, lots of street dogs, new new wine shops are amidst residential areas


Periannan Ankamuthu
ஆக 15, 2024 21:47

அரசு விருதுகள் எப்படி வழங்கப்படுகின்றன என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. மஹா மட்டமான சாலைகள் ஏழு எட்டு வருடங்களாக மேடு பள்ளமான வீதிகள் தினம் தினம் போலாக்குவரத்து நெரிசலால் அவதிப்படும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து. எப்போது எங்க வீழ்வோமோ என்று பயந்து பயந்து ஓட்டும் இருசக்கர வாகன ஓட்டிகள். தவறான எதிர் திசை போக்குவரத்து. இரவில் அடிக்கடி ஒருவழிப்பாதை யாக மாறும் இரு வழிப்பாதை அதனால் ஏற்படும் உயிரிழப்ப்புகள். இப்படி தினம் தினம் செத்து பிழைத்து கொண்டிருக்கும் கோவை வாசிகள் வயிற்றெரிச்சலை கொட்டிக்கொள்ள வேண்டாம் இந்த அரசு.


Ravi
ஆக 16, 2024 23:26

Very true


மேலும் செய்திகள்



புதிய வீடியோ