உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இளநீர் விலையில் மாற்றம் இல்லை

இளநீர் விலையில் மாற்றம் இல்லை

பொள்ளாச்சி:பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலை கடந்த வார விலையே நீடிக்கிறது.பொள்ளாச்சி, உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளில், தென்னை விவசாயம் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. இதில், இளநீர் விற்பனை முக்கியமாக உள்ளது. இது பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:இந்த வாரம் நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீரின் விலை கடந்த வார விலையில் மாற்றம் இல்லாமல், 41 ரூபாயாகவே நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒரு டன் இளநீரின் விலை, 16,500 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இளநீர் வரத்து தொடர்ந்து மிக குறைவாக உள்ளது. இளநீரின் தேவை பலமடங்கு உயர்ந்துள்ளது. எனவே, இளநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, குறைந்த விலைக்கு இளநீரை விற்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை