உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கவைய காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பு

கவைய காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பு

அன்னூர்;கோவில்பாளையம், கவைய காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர். கோவில்பாளையத்தில், கொங்கு நாட்டு திருக்கடையூர் என்று அழைக்கப்படும் காலகாலேஸ்வரர் கோவில் அருகே பல நூற்றாண்டுகளாக கவைய காளியம்மன் அருள் பாலித்து வருகிறார்.இக்கோவிலில் கடந்த 1954, 1975 மட்டும் 2001ல் கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது கோவிலில் திருப்பணி செய்யப்பட்டு வர்ணம் தீட்டப்பட்டது.கும்பாபிஷேக விழா கடந்த 4ம் தேதி காலை 6:00 மணிக்கு கோமாதா வழிபாடுடன் துவங்கியது. மாலையில் பக்தர்கள் முளைப்பாலிகையுன் ஊர்வலமாக வந்தனர். 508 மகளிர் பங்கேற்ற திருவிளக்கு வழிபாடு நடந்தது. இரவு முதற்கால வேள்வி பூஜையும், கொங்கு பெருஞ்சலங்கை ஆட்டமும் நடந்தது.கடந்த 5ம் தேதி காலை இரண்டாம் கால வேள்வி பூஜையும், விமான கலசங்கள் நிறுவுதலும் நடந்தது. மாலையில் எண்வகை மருந்து சாத்துதல் நடந்தது. பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள், தென்சேரிமலை ஆதீனம் முத்து சிவராம சாமி அடிகள் பங்கேற்றனர். இரவு மங்கை வள்ளி கும்மியாட்டம் நடந்தது.நேற்று காலை 5:45 மணிக்கு துணை கோவில்களுக்கும், காலை 6:30 மணிக்கு விமான கலசத்திற்கும், இதையடுத்து மூலமூர்த்திகளுக்கும், சிரவை ஆதீனம் குமரகுருபர சாமிகள் தலைமையில், சிவாச்சாரியார்கள் புனித நீரூற்றி கும்பாபிஷேகம் செய்தனர். அம்மனுக்கு அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. கோவை, அன்னூர் பகுதியைச் சேர்ந்த பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை