உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கீழடி 10ம் கட்ட அகழாய்வு செம்பு பொருள் கண்டெடுப்பு

கீழடி 10ம் கட்ட அகழாய்வு செம்பு பொருள் கண்டெடுப்பு

கீழடி : சிவகங்கை மாவட்டம் கீழடியில், தனியார் நிலத்தில் 10ம் கட்ட அகழாய்வு பணி ஜூன் 18ல் துவங்கியது. இதுவரை இரு குழிகள் மட்டும் 3.5 அடி ஆழம் வரை தோண்டப்பட்டு அகழாய்வு நடந்துள்ளது. இதில் பாசிகள், கண்ணாடி மணிகள், தா என்ற தமிழி எழுத்து பானை ஓடு, மீன் உருவம் பொறித்த இரு பானை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளன.கீழடியில் தமிழக தொல்லியல் துறை சார்பில் நடத்தப்பட்டு வரும் அகழாய்வில் குறைந்த செம்பு பொருட்கள் கண்டறியப்பட்ட நிலையில், 10ம் கட்ட அகழாய்வில் சற்று பெரிய அளவிலான செம்பு பொருட்கள் கிடைத்துள்ளன. இதனால், 2,600 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் செம்பு பொருட்களை பயன்படுத்தியிருப்பது தெரிந்தது.செம்பு பொருட்களை எதற்காக பயன்படுத்தியுள்ளனர் என, 'கார்பன் டேட்டிங்' ஆய்வு மூலம் சோதனை செய்ய தொல்லியல் துறை முடிவு செய்துள்ளது. தொடர்ந்து அகழாய்வு பணி, கீழடி தள பிரிவு இயக்குனர் ரமேஷ், இணை இயக்குனர் அஜய் தலைமையில் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை