உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இளநீர் பண்ணை விலை ஒரு ரூபாய் குறைவு

இளநீர் பண்ணை விலை ஒரு ரூபாய் குறைவு

பொள்ளாச்சி;பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலை ஒரு ரூபாய் குறைந்துள்ளது.ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:இந்த வாரம் தொடர்ந்து இளநீர் வரத்து குறைந்து காணப்படுகிறது. வடமாநிலங்களில் தொடர்ந்து வெப்ப அலை வீசுகிறது; இளநீருக்கு கடும் தட்டுப்பாடு உள்ளது.மார்ச், ஏப்., மே மாதங்களில் நிலவிய கடுமையான வெப்ப சீதோஷ்ண நிலையின் காரணமாக, சில தோப்புகளில் இளநீரின் தரம் குறைந்து காணப்படுகிறது.இதன் காரணமாக இந்த வாரம் நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீரின் விலை கடந்த வார விலையில் இருந்து ஒரு ரூபாய் குறைத்து, 40 ரூபாயாகவே நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒரு டன் இளநீரின் விலை, 16,000 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ