உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  2,700 மாடுகளுக்கு தடுப்பூசி

 2,700 மாடுகளுக்கு தடுப்பூசி

காரமடை, கோவை மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் 8 வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி பணி 29ம் தேதி துவங்குகிறது. பசு மற்றும் எருமைகளுக்கு இந்த தடுப்பூசி போடப்படும். இதில் காரமடை கால்நடை மருந்தகத்திற்குட்பட்ட 2,700 மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட உள்ளது . இது குறித்து கால்நடை துறை அதிகாரி கூறுகையில், காரமடை நகர், சிக்காரம்பாளையம், ஓடந்துறை ஆகிய பகுதிகளில் 2,700 மாடுகள் உள்ளன. தினமும் 200 மாடுகளுக்கு தடுப்பூசி போடப்படும். ஜனவரி 28 வரை இந்த பணி நடைபெறும்” என்றார். தடுப்பூசி போடாவிட்டால் கோமாரி நோய் தாக்க வாய்ப்புள்ளது. இந்நோயினால் இறப்பு குறைவாக இருந்த போதிலும், கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைவு, எருதுகளின் வேலைத்திறன் குறைவு, கறவை மாடுகளில் சினை பிடிப்பு தடைபடுவது போன்ற பாதிப்புகள் ஏற்படலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை