| ADDED : டிச 30, 2025 05:07 AM
கோவை: கோவை மாவட்ட கால்பந்து சங்கம் (சி.டி.எப்.ஏ.,) சார்பில் நடத்தப்படும், 'பி-டிவிஷன் லீக்' கால்பந்து போட்டிகள், கடந்த 13ம் தேதி துவங்கின. நேரு விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் இப்போட்டிகளில், 11 அணிகள் பங்கேற்றுள்ளன. இதுவரை 34 போட்டிகள் முடிவடைந்துள்ளன. நேற்று நடைபெற்ற போட்டியில், கோயம்புத்தூர் சிட்டி புட்பால் அகாடமி அணியும், கோயம்புத்தூர் பார் அசோசியேஷன் புட்பால் கிளப் அணியும் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில், 4-0 என்ற கோல் கணக்கில், கோயம்புத்தூர் சிட்டி அணி வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில், அசோகா புட்பால் கிளப் அணியும், பிஷப் அப்பாசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணியும் மோதின. இதில், 4-1 என்ற கோல் கணக்கில் அசோகா அணி வெற்றி பெற்றது. சி.டி.எப்.ஏ. தலைவர் மதன் செந்தில், செயலாளர் அணில்குமார் போட்டிகளை நடத்துகின்றனர்.