உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / செயின் பறிப்பில் ஈடுபடுவோரை பிடிக்க பீட் சிஸ்டம்: கமிஷனர்

செயின் பறிப்பில் ஈடுபடுவோரை பிடிக்க பீட் சிஸ்டம்: கமிஷனர்

கோவை, ; மாநகர பகுதிகளில் செயின் பறிப்பில் ஈடுபடும் நபர்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என, போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் தெரிவித்தார். கோவை மாநகர பகுதிகளில் ஒரு சில இடங்களில், அடிக்கடி செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெறுகின்றன. பீளமேடு, சுந்தராபுரம் பகுதிகளில் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்களை, போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். அதில் சிலர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. கடந்த 13ம் தேதி இரவு, பொள்ளாச்சி சாலை, ரத்தினம் கல்லுாரி அருகில், பிரேமா, 50 என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர், பிரேமாவின், 3.5 சவரன் தங்க செயினை பறித்து சென்றனர். இதேபோல், சுந்தராபுரம் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அடிக்கடி செயின் பறிப்பு சம்பவங்கள் நடக்கின்றன. சுந்தராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் கூறுகையில், ''செயின் பறிப்பு, வழிப்பறி சம்பவங்களை தடுக்க, போலீசார் 24 மணி நேரமும் ரோந்தில் இருக்கும் வகையில், 'பீட் சிஸ்டம்' முறை கொண்டு வரப்பட்டது. தற்போது, நடக்கும் சம்பவங்களின் அடிப்படையில், ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் பணிகளில், மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. கடைசியாக நடந்த சம்பவத்தை தவிர, மற்ற செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட அனைவரும், கைது செய்யப்பட்டுள்ளனர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை