உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பிரம்ம தீர்த்தம் கிணறு தூர்வாரப்பட்டது; 70 மூட்டைகளில் காணிக்கை கட்டி வைப்பு

பிரம்ம தீர்த்தம் கிணறு தூர்வாரப்பட்டது; 70 மூட்டைகளில் காணிக்கை கட்டி வைப்பு

மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதசுவாமி கோவில் கிணறு 25 ஆண்டுகளுக்கு பிறகு தூர்வாரப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றாக காரமடை அரங்கநாதசுவாமி திருக்கோவில் உள்ளது. இக்கோவிலின் மூலவர் சன்னதி பின்புறம், கோயில் வளாகத்தில் அமைந்துள்ள பிரம்ம தீர்த்தம் கிணறு 70 அடி ஆழமும், 20 அடி அகலமும் கொண்டது. இந்த கிணறு 25 ஆண்டுகளாக தூர்வாரவில்லை. இதனால் நீரை கோவிலின் எந்த பயன்பாட்டிற்கும் எடுக்க முடியவில்லை. மேலும்,பக்தர்கள் ஒரு சிலர் காணிக்கையை உண்டியில் செலுத்தாமல் கிணற்றில் போட்டுவிட்டு செல்வார்கள்.இதுதொடர்பாக உள்ளூர் முக்கியஸ்தர்கள், பக்தர்கள் கிணற்று நீரை தூர்வாரி பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, அறங்காவலர் குழுவினர் முன்னிலையில் தூர்வாரும் பணி கடந்த 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட காணிக்கைகள் 70 மூட்டைகள், 9 பெட்டிகளில் சேகரித்து பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இவற்றை கோவை மாவட்ட ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் இந்திரா நேற்று கோவிலுக்கு வந்து ஆய்வு செய்தார். கிணற்று நீர் 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் பயன்பாட்டிற்கு வர உள்ளதால், பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

KANNAN R
பிப் 24, 2025 21:28

உண்டியலில் போட்டால் ஆராய பார்ப்பன பூசாரிகள் ஆட்டை பாடுவார்கள் என பயந்தே திராவிட தமிழ்ர்கள் தமிழ் தாய் வயிரான கிணற்றில் புதைத்துள்ளனர்.


KANNAN R
பிப் 24, 2025 21:20

உண்டியல் காணிக்கை போட்டால் ஆரிய பார்ப்பன பூசாரி திருடி. மறைத்திடுவான் என்று பயந்தே திராவிட தமிழன் தமிழ் தாய் வயிரான கிணற்றில் புதைத்துள்ளனர்


Tetra
பிப் 22, 2025 18:22

காணிக்கை பிழைக்குமா?


Tetra
பிப் 22, 2025 18:21

அறமில்லா துறையை நம்பாமல் தானே பக்தர்கள் காணிக்கைகளை கிணற்றில் போட்டார்கள். இதுவே அத்துறைக்கு நல்ல அடி. திருந்துவார்களா? மாட்டார்கள்.


Bhaskaran
பிப் 22, 2025 17:54

அதிகாரிகள் பாதி பணம்


S.jayaram
பிப் 22, 2025 05:31

அதுதான் அறங்காவலர்கள் இருக்கிறார்களே இனி அதை அங்கேயே வைத்து எண்ணி அங்குள்ள வங்கியில் செலுத்தவேண்டியத்து தானே மற்றபொருள்களை கோவில் ஸ்டோர் ரூமில் பாதுகாப்பாக பெட்டியில் வைத்து பூட்டவேண்டியது கோவிலுக்கு தேவைப்படும்போது எடுத்து பயன்படுத்திக்கொள்ளும்.


RADHAKRISHNAN
பிப் 21, 2025 15:35

உண்டியல் காசு திருடர்கள் வந்துவுட்டார்களா???


Gajageswari
பிப் 21, 2025 11:49

நல்ல துவக்கம். வெள்ளியை நீரில் போட்டால் நீர் சுத்தமாகும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை