உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பொள்ளாச்சியில் இடியுடன் கனமழை

பொள்ளாச்சியில் இடியுடன் கனமழை

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் நேற்று பகல் இடியுடன் கூடிய கன மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.பொள்ளாச்சியில், நேற்று பகல் 3.30 மணி முதல் 4.30 மணி வரை இடியுடன் கூடிய கன மழை பெய்தது. தாழ்வான பகுதிகளிலுள்ள குடியிருப்பு பகுதிகளிலும், ரோடுகளில் மழை நீருடன், கழிவு நீர் சென்றதால் மக்கள் தவிப்புக்குள்ளாகினர். ரோடுகளில் அதிகளவு நீர் சென்றதால், வாகன ஓட்டிகள் தடுமாறி விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டது. தொடர் மழையால் ஓடைகளில் நீர்ப்பெருக்கெடுத்து அணைகளுக்கு செல்கிறது. பி.ஏ.பி., பாசன திட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. சோலையாறு அணையின் 160 அடி உயரத்தில் 148.25 அடி நீர்மட்டம் உள்ளது.

அணைக்கு விநாடிக்கு 2,463.89 கனஅடி தண்ணீர் வரத்துள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 1,435.53 கனஅடி தண்ணீர் வெளியேறுகிறது.பரம்பிக்குளம் அணையின் 72 அடி உயரத்தில் 68.79 அடி நீர்மட்டம் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 1,383 கனஅடி நீர் வரத்துள்ளது. அணையிலிருந்து 53 கனஅடி நீர் வெளியேறுகிறது. வெளியேற்றத்தை விட வரத்து அதிகரித்துள்ளதால், அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. அணை முழு கொள்ளளவை எட்ட இன்னும் மூன்றடி நீர் மட்டுமே தேவையாக உள்ளது.ஆழியாறு அணையின் 120 அடி உயரத்தில் 103.10 அடி நீர்மட்டம் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 434 கனஅடி வரத்தும், 141 கனஅடி வெளியேற்றமும் உள்ளது.திருமூர்த்தி அணையில் 60 அடி உயரத்தில் 34.05 அடி நீர்மட்டம் உள்ளது.

அமராவதி அணையின் 90 அடி உயரத்தில் 43.76 அடி நீர்மட்டம் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 824 கன அடி நீர் வரத்தாகவும், 259 கன அடி தண்ணீர் வெளியேற்றமாகவும் உள்ளது.நேற்று காலை 8.00 மணி வரை பதிவான மழையளவு (மில்லி மீட்டரில்) :சோலையாறு- 22, பரம்பிக்குளம்- 10, ஆழியாறு - 5, மேல்நீராறு- 34, கீழ்நீராறு- 17, வால்பாறை - 17, பொள்ளாச்சி - 10, மணக்கடவு - 12.7, நல்லாறு - 2, தூணக்கடவு- 17, பெருவாரிப்பள்ளம்- 14, சர்க்கார்பதி - 2, காடம்பாறை - 2.இயல்பு வாழ்க்கை பாதிப்பு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை