மேலும் செய்திகள்
108 ஆம்புலன்சில் பிறந்த குழந்தை
08-Jul-2025
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, '108' ஆம்புலன்சில், பெண்ணுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன.பொள்ளாச்சி அருகே, ஆத்துப்பொள்ளாச்சியை சேர்ந்த கூலித்தொழிலாளி ஜாஹீர் உசைன் மனைவி மாற்றுத்திறனாளி சரண்யாகுமரி,27, என்பவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. தகவலின் பேரில், அவசர கால மருத்துவ நுட்புநர் துர்காதேவி, ஓட்டுநர் இளையபாரதி ஆகியோர், '108' ஆம்புலன்சில் அவரது வீட்டுக்கு சென்றனர்.வீட்டில் இருந்து, ஆம்புலன்சில் ஏற்றும் போது வலி அதிகமாகியுள்ளது. இதனால், ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்க்கப்பட்டதில், அவருக்கு, இரட்டை பெண் குழந்தைகள் பிரசவமானது. தாயும், குழந்தைகளும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பாதுகாப்பாக அனுமதிக்கப்பட்டனர்.
08-Jul-2025