உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

 நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, அங்கலகுறிச்சியில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை நடக்கிறது. அங்கலகுறிச்சி கோட்ட அளவிலான மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (19ம் தேதி) காலை, 11:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை அங்கலகுறிச்சி கோட்ட அலுவலகத்தில் நடக்கிறது. உடுமலை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், கோட்டத்துக்கு உட்பட்ட மின்நுகர்வோர்கள் பங்கேற்று, மின்சாரம் தொடர்பான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். இத்தகவலை அங்கலகுறிச்சி செயற்பொறியாளர் தேவானந்த் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை