உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வடசித்துார் சுகாதார நிலையத்தில் கண் சிகிச்சை முகாம்

வடசித்துார் சுகாதார நிலையத்தில் கண் சிகிச்சை முகாம்

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, வடசித்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், இன்று கண் சிகிச்சை முகாம் நடக்கிறது.கிணத்துக்கடவு, வடசித்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், இன்று(12ம் தேதி) கண் புரை இலவச பரிசோதனை முகாம் நடக்கிறது. இந்த முகாமானது தனியார் டிரஸ்ட் மற்றும் தமிழக அரசு இணைந்து நடத்துகிறது.முகாமில், அனைத்து விதமான கண் குறைபாடுகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.கண்புரை முற்றியவர்களுக்கு இலவசமாக லென்ஸ் வைத்து அறுவை சிகிச்சைகள் மற்றும் கண் குறைபாடு உள்ளவர் களுக்கு இலவச கண் கண்ணாடி வழங்கப்படுகிறது.அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படும் பயனாளர்கள், கட்டாயம் ஆதார் கார்டு நகல் வைத்திருக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை