உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மின் நிலையத்தில் தீ விபத்து

மின் நிலையத்தில் தீ விபத்து

கோவை:கரியாம்பாளையம் துணை மின் நிலையத்தில் டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட தீ ஒரு மணி நேரத்தில் அணைக்கப்பட்டது.கோவை மாவட்டம், அன்னுார் அருகே கரியாம்பாளையத்தில் துணை மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து அன்னுார், கரியாம்பாளையம், கெம்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது. நேற்று இரவு, 8.00 மணிக்கு துணை மின் நிலையத்தில் உள்ள டிரான்ஸ்பார்மரில் திடீரென தீ பிடித்தது. பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. தகவல் அறிந்த அன்னூர் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலச்சந்திரன், தலைமையில் தீயணைப்பு வீரர்கள், மின்வாரிய ஊழியர்கள், 45 நிமிடம் போராடி, நுரையை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதனால் அன்னுார் பகுதியில், 45 நிமிடம் மின் தடை ஏற்பட்டது. டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட தீ, 50 அடி உயரத்துக்கு கொழுந்து விட்டு எரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை