உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குப்பையில் பற்றி எரிந்த தீ

குப்பையில் பற்றி எரிந்த தீ

சூலுார்; இருகூர் பேரூராட்சிக்கு உட்பட்டது காமாட்சி புரம். இங்குள்ள நொய்யல் ஆற்றங்கரையில், பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பை கொட்டப்படுகிறது. நேற்று காலை, குப்பைக்கு சில நபர்கள் தீவைத்ததாக கூறப்படுகிறது. இதனால், தீ மள மளவென அனைத்து பகுதிகளுக்கும் பரவியது. கரும்புகையும் எழுந்ததால், அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள், ரோட்டில் சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை