உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாட தீயணைப்பு துறை விழிப்புணர்வு

தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாட தீயணைப்பு துறை விழிப்புணர்வு

வால்பாறை: தீபாவளி பண்டிகையை பாதுகாப்பான முறையில் கொண்டாட வேண்டும் என, தீயணைப்பு துறையினர் விழிப்புண்வு ஏற்படுத்தினர். வால்பாறை தீயணைப்புத்துறை சார்பில், தீ விபத்தில்லா தீபாவளி பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாடுவது குறித்து, வால்பாறை மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. வால்பாறை காந்திசிலை பஸ் ஸ்டாண்டில் நடந்த நிகழ்ச்சிக்கு தீயணைப்பு துறை நிலைய அலுவலர் பழனிசாமி தலைமை வகித்தார். தீயணைப்பு நிலைய வீரர்கள் துண்டுப்பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி பேசியதாவது: தீவிபத்தில்லாமல் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வகையில், பாதுகாப்பான முறையில் பட்டாசுளை வெடிக்க வேண்டும். வனவிலங்குகளுக்கு இடையூறு இல்லாத வகையில் அரசு அறிவித்துள்ள நேரத்தில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும். குழந்தைகள் சட்டைப்பையில் பட்டாசு வைக்க பெற்றோர்கள் அனுமதிக்க கூடாது. பட்டாசுகளை கடையிலிருந்து வாங்கி வீட்டிற்கு செல்லும் போது, பாதுகாப்பாக எடுத்துச்செல்ல வேண்டும். அரசு அங்கீகரிக்கப்பட்ட கடைகளில் மட்டுமே பட்டாசுகளை வாங்க வேண்டும். சமையல் அறைக்கு அருகில் பட்டாசுகளை வைக்க கூடாது. பெரியர்வர்கள் மேற்பார்வையில் மட்டுமே குழந்தைகளை பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும். வெடிக்காத பட்டாசுகளை கைகளில் தொடவோ, காலால் மிதிக்கவோ கூடாது. விபத்தில்லா தீபாவளியை கொண்டாட விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இவ்வாறு, பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை