உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தலைமை காவலரை வெட்டி மனைவியிடம் நகை பறிப்பு

தலைமை காவலரை வெட்டி மனைவியிடம் நகை பறிப்பு

கோவை: காவலரை வெட்டி, அவரது மனைவியிடம் நகை பறிக்கப்பட்டது.கோவை கியூ பிரிவு தலைமை காவலர் பார்த்திபன், 42. இன்ஸ்பெக்டரின் வாகன ஓட்டுநராக உள்ளார். இவரது மனைவி ரேவதி, 38; தனியார் பள்ளி ஆசிரியை. நேற்று முன்தினம் இரவு மனைவியுடன், 'எல் அண்டு டி' பைபாஸ் ரோட்டில் உள்ள ஹோட்டலுக்கு சென்றார். சாப்பிட்டு முடித்த பின், அணுகுசாலை வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு பைக்கில் வந்த அடையாளம் தெரியாத மூன்று நபர்கள், திடீரென அவர்களை தாக்கினர். மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டியதில், பார்த்திபனின் தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.அந்நபர்கள் பார்த்திபன் மனைவியின் தாலி செயின் உட்பட 7 சவரன் நகைகளை பறித்து தப்பினர். பார்த்திபன், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சூலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை