உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காய்கறிகள் வரத்து அதிகரிப்பு; வியாபாரம் மந்தம்

காய்கறிகள் வரத்து அதிகரிப்பு; வியாபாரம் மந்தம்

மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் காய்கறி மார்க்கெட்டிற்கு காய்கறிகள் வரத்து அதிகரித்துள்ளதால், வியாபாரம் மந்தம் அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில், அன்னூர் சாலையில், மொத்த காய்கறி மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டிற்கு கேரட், முட்டைகோஸ், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளை உள்ளூர் விவசாயிகள் மட்டுமின்றி, நீலகிரி மற்றும் கர்நாடகா மாநில விவசாயிகளும் கொண்டு வருகின்றனர்.மேட்டுப்பாளையத்தில் இருந்து கேரளா மற்றும் தமிழகத்தில் உள்ள தென் மாவட்டங்களுக்கு காய்கறிகள் அனுப்பப்படுகின்றன. நீலகிரி மாவட்டம் ஊட்டி, கேத்தி, கோத்தகிரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து கேரட்டுகள் மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு அதிக அளவில் வருகின்றன.தற்போது காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளதால், வியாபாரம் மந்தம் அடைந்துள்ளதாக மார்க்கெட் வியாபாரிகள் தெரிவித்தனர்.இதுகுறித்து மேட்டுப்பாளையம் மார்க்கெட் வியாபாரிகள் கூறியதாவது:மார்க்கெட்டிற்கு தினமும் 3 ஆயிரம் மூட்டைகள் கேரட் வருகிறது. ஒரு மூட்டை என்பது 80 கிலோ ஆகும். அதே போல் 200 டன் வரை முட்டை கோஸ் வருகிறது. 100 டன் வரை பீட்ரூட் வருகிறது.கேரட் கிலோ ஒன்றுக்கு ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகிறது. முட்டை கோஸ் கிலோ ஒன்றுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரையிலும், பீட்ரூட் கிலோ ஒன்றுக்கு ரூ.30 முதல் ரூ.40 வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றன. காய்கறிகளின் வரத்து அதிகரிப்பால் வியாபாரம் மந்த நிலை அடைந்துள்ளது. கேரட், பீட்ரூட், கோஸ் என அனைத்து காய்கறிகளும் அதிக அளவில் கிடைப்பதால் தான் மந்த நிலை ஏற்படுகிறது. இதே நிலை நீடித்தால் காய்கறிகள் தேக்கம் ஆகும்.இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை